ETV Bharat / state

வாடகைக்கு வீடு கேட்டுவந்த நைஜீரிய இளைஞர்கள்; போலீஸில் ஒப்படைப்பு!

author img

By

Published : Oct 9, 2019, 12:12 PM IST

வீடு கேட்டுவந்த நைஜீரிய நாட்டு இளைஞர்கள்

சென்னை : கேளம்பாக்கம் அருகே வாடகைக்கு வீடு கேட்டுவந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்த என்சிசி அதிகாரி.

சென்னை கேளம்பாக்கம் அருகே வசித்து வருபவர் என்சிசி அதிகாரியான ஆறுமுகம். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. நேற்றிரவு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வீடு வாடகை கேட்டு ஆறுமுகத்தை அணுகியுள்ளனர்.

அந்த இளைஞர்களிடம் ஏதாவது ஒரு ஆவணத்தை கேட்டபோது. தங்களிடம் எந்த ஆவணமும் இல்லையென்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஆறுமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

வீடு கேட்டுவந்த நைஜீரிய நாட்டு இளைஞர்கள்
வீடு கேட்டுவந்த நைஜீரிய நாட்டு இளைஞர்கள்

விசாரணையில், அந்த இரண்டு இளைஞர்களின் மீதும் ஏற்கனவே மதுரவாயல் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : போதைப் பொருள் சப்ளை செய்த கும்பல் கைது!

Intro:Body:சென்னை கேளம்பாக்கத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை

கேளம்பாக்கத்தில் உள்ள என்சிசி அதிகாரி ஆறுமுகம் வீட்டிற்கு வாடகைக்கு தங்குவதற்காக கேட்டுள்ளனர்

அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லாததால் போலீசாருக்கு என்சிசி அதிகாரி தகவல்

அவர்கள் 2 பேரையும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை

2 இளைஞர்கள் மீதும் மதுரவாயல் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு இருப்பதாக தகவல்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.