ETV Bharat / opinion

இஸ்ரேலை கைகழுவும் அமெரிக்கா? இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற பைடன் திட்டமா? மேற்கு ஆசியாவில் மாறும் அமெரிக்காவின் நிலைப்பாடு? - Bidens new West Asia strategy

author img

By Major General Harsha Kakar

Published : May 14, 2024, 5:41 PM IST

இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆதரவை அமெரிக்க திரும்பப் பெற முனைப்பு காட்டி வரும் பட்சத்தில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்க இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவே அதிபர் பைடனின் இந்தத் திட்டம் என விவரிக்கிறார் மேஜர் ஜெனரல் ஹர்ஷா கக்கர்.

Etv Bharat
File photo of White House (Getty Images)

ஐதராபாத்: அமெரிக்க அதிபர் பைடனின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்று பார்க்கையில், மேற்கு ஆசியா மீதான அந்நாட்டின் பார்வை என்பது முற்றிலும் மாறுபட்டு இருப்பதை உணர முடிகிறது. அதிபர் பைடனின் சிறப்பு கவுன்சலில் மகேர் பிடார் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்க வகையில் உற்று நோக்க வேண்டிய விஷயமாகும்.

முன்னதாக ஒபாமா நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாராத்தை மகேர் பிடார் கையாண்டு வந்தார். மாணவராக இருந்த போது அவர் பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு வன்முறைகளுக்கு எதிரான பணிகளை மேற்கொள்ளக் கூடிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. மேலும், இஸ்ரேல் வழங்கும் நிதியுதவி நிகழ்வுகளை நிலைநிறுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.

தற்போது இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆதரவை அமெரிக்கா திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அமெரிக்க வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் யூத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதையும், போலீசை அதிகாரத்தை பயன்படுத்தி யூத எதிர்ப்பு விவகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கான ஆதரவைக் குறைத்து, வரவிருக்கும் அதிபர் தேர்தல்களில் இஸ்லாமிய அமெரிக்க மக்களின் வாக்குகளை ஈர்க்க அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக ராபாவை தாண்டி இஸ்ரேல் மேற்கொண்டு தனது போர் எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிடும் போதும், இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுதங்கள், வெடி மருந்து உள்ளிட்ட ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிபர் பைடன், "ராபாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மேற்கொண்டு ஆயுதங்கள், வெடிமருந்து எதுவும் வழங்கப் போவதில்லை" என தெரிவித்து இருந்தார்.

மேலும், ராபா உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த விரும்பும்பட்சத்தில் அதற்கு அமெரிக்கா துணை போகாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதயான்குவின் பெயரை குறிப்பிட்டு அதிபர் பைடன் தெரிவித்தது, ஈரானுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தடும் செய்தியாக அமைந்தது.

இதனிடையே, கத்தார் மற்றும் லெபனானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலை பல முனைகளில் இருந்து ஈரான் ஆதரவு படைகள் தாக்கி வரும் போதிலும், ஈரானுக்கு வங்கப்பட்ட பொருளாதார தடை தள்ளுபடி நிலையை அமெரிக்க தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஈரானிடம் இருந்து ஈராக் மின்சார கொள்முதலை மேற்கொள்ள அமெரிக்கா காலாண்டு பொருளாதார தடை தள்ளுபடியை அறிவித்துள்ளது. மின்சார கொள்முதலுக்கான கட்டணம் ஓமானில் உள்ள வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் நிலையில் அதை ஈரான் யூரோவாக மாற்றிக் கொள்ள முடியும்.

மூன்றாவதாக, வெளிநாடுகளுக்கு வெடிமருந்து மற்றும் ஆயுதம் விநியோகிக்க தடை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய அதிபர் மாளிகை உத்தரவிட்டது. மேலும், இஸ்ரேல் போரின் போது சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதிபர் மாளிகை தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

மேலும் ராணுவ நடவடிக்கைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தணிப்பதற்கான சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான அறிவு, அனுபவம் மற்றும் கருவிகள் இஸ்ரேலிடம் உள்ளதாகவும் ஆனால் அதிக அளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகள் உள்பட அசம்பாவிதங்களை எல்லா சந்தர்ப்பங்களிலும் திறம்பட பயன்படுத்துதல் வேண்டும் என்றும் வெள்ளை மாளிகையில் தெரித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த திடீர் முடிவுகளால் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலாவதாக, அமெரிக்கா இனி இஸ்ரேலுக்கு எந்த உதவிகளையும் வழங்கப்போவதில்லை. இதுவரை இஸ்ரேல் தனது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டாலும், அமெரிக்காவின் ஆலோசனைகளையும் கவலைகளையும் புறக்கணித்தாலும், தமக்கு அமெரிக்க ஆதரவு இருப்பதாக எப்போதும் கருதி வந்தது.

இரண்டாவதாக அதிபர் பைடன், நெருங்கி வரும் அதிபர் தேர்தலை முன்னிறுத்தி அமெரிக்க இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அதற்காக இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆதரவை திருமப் பெறவும் அவர் தயாராக உள்ளார். மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்குள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து அதிபர் பைடன் அரசு கவனித்து வருகிறது.

இஸ்ரேலிய படைகள் காஸாவில் உள்ள ராபா பகுதியில் தாக்குதலை நடத்தினால், அங்கு ஏற்படும் உயிரிழப்புகள் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை எதிர் போட்டியாளரான டிரம்ப்புக்கு ஆதரவாக அமையக் கூடும் என்பதை பைடன் தெளிவாக தெரிந்தவராக காணப்படுகிறார்.

அதேநேரம், இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளையை உடனடியாக நிறுத்தினால் யூத மக்கள் அதிபர் பைடனை புறக்கணிக்க நேரிடும். அதன் காரணமாக மோதல் போக்குகளை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். மேலும், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை எதிர்தரப்புக்கு கைமாறிவிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளில் பைடன் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

மூன்றாவதாக, காஸா மீதான போரில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதயான்குவின் கொள்கைகள் அமெரிக்க வெள்ளை மாளிகையை சற்று விரக்திக்குள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வெளியில் இருந்து கொண்டே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததாக கூறப்படுகிறது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் வந்துள்ள ஹமாஸ் படையினருக்கு, ராபா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் கூடுதல் சவுகரிய புள்ளிகளாக மாறிவிடக் கூடும் என அமெரிக்கா எச்சரிக்கிறது. தற்போது எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகியவற்றால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் பாதிக்கப்படும்.

மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தாக்கல் செய்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக எகிப்து கூறி இருப்பது அந்நாட்டு பின்னடவைத் தான் ஏற்படுத்தும். மேலும், அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

காஸாவில் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் பட்சத்தில் இஸ்ரேலை உடனடியாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை, ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில், மத்திய கிழக்கு நாடுகளிலும் தற்போது பிரச்சினைகள் பூதாகரமடையத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதயான்குவின் கூட்டணி ஆட்சியும் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. ஹமாஸ் படைகளின் தாக்குதலின் போது கடத்திச் செல்லப்பட்ட தங்களது உறவினர்களை மீட்டுத் தரக் கோரி ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுக்க மற்றொரு தரப்பினர் போர் நிறுத்த நடவடிக்கைகளை தொடங்குமாறு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களிலும் அடி என்பது போல் இரு தலை கொல்லியாக பிரதமர் பெஞ்சமின் நெதயான்குவின் அரசு ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆயுத சப்ளையை நிறுத்திய போதும் தொடர்ந்து ராபா மீது தனது ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடத்தி வரும் பெஞ்சமின் நெதயான்கு, யாருடைய ஆதரவு இல்லாத போதும் கடைசி கட்டம் வரை தனித்து போரிடப்போவதாக அறிவித்துள்ளார்.

விரைவில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள பெஞ்சமின் நெதயான்குவின் லிக்குட் கட்சி பெரிய அளவிலான தோல்வியை இதில் சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நெதயான்கு, தேர்தலில் தோல்வி கண்டால் தனது அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட வேண்டியது இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக ஹமாஸ் படையுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிணையக் கைதிகளாக பிடிபட்டவர்களை மீட்பதே நெதயான்கு தனது அரசியல் வீழ்ச்சியை தடுக்க ஒரே வழி எனக் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் பைடனின் பிரச்சனை என்ன என்பது இஸ்ரேலுக்கு தெரியவில்லை. ஆனால் நெதன்யாகு, அமெரிக்காவின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கிறார், ஏனெனில் அமெரிக்கா சொல்வதைக் கேட்பதை விட உயிர்வாழ்வதற்கான தனது தனிப்பட்ட போராட்டமே முக்கியமானது என்று அவர் கருதுகிறார்.

ஈரானுடனான பிரச்சினைகளை தீர்ப்பதில் பைடனின் பல முயற்சிகள் இஸ்ரேலால் தடைபட்டுள்ளன. மேலும் சவுதி - இஸ்ரேல் அமைதி முயற்சியை கருத்தில் கொள்ள நிர்பந்திக்கின்றன. அதன் மூலம் ஈரான் எதிர்ப்பு கூட்டணியை மேம்படுத்துகிறது. அமெரிக்க ஆதரவுடன் நடந்த ராபா தாக்குதலுக்குப் பிறகு, உயிரிழப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில், அமெரிக்காவின் செல்வாக்கு, அரபு நாடுகளில் குறையத் தொடங்கும் எனத் தெரிகிறது.

ஐநா மற்றும் சர்வதேச நீதிமன்றம் உட்பட பிற உலகளாவிய அமைப்புகளும் போரில் அப்பாவி மக்கள் பலியானதற்கு இஸ்ரேலை பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து தீர்மானங்களையும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்கிறது.

அதேநேரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீனம் அங்கம் பெறுவது தொடர்பான ஐநா பொதுச் சபை வாக்கெடுப்பு அமெரிக்க-இஸ்ரேல் பின்னடைவாக அமைந்தது. அதேநேரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது வீட்டோ அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி இருந்தால் சர்வதேச அளவில் தனது செல்வாக்கு குறையும் என்பதை அமெரிக்கா நிச்சயம் அறிந்திருக்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, மேற்கு ஆசியாவில் அதன் ஆதிக்கத்தை செலுத்துவதற்கான திட்டத்தில் இஸ்ரேல் இன்றியமையாத பகுதியாகும். இது அமெரிக்காவிற்கு தேவையான ராணுவ ஆதரவை வழங்கும் போது அமைதியை உறுதி செய்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா முக்கிய ஆதரவாளராகவும் நிதியளிப்பவராகவும் இருந்த போதிலும், அதன் ஆலோசனையை பின்பற்ற மறுக்கும் நிலையில், தொடர்ந்து ஆதரவு வழங்க அது விரும்பவில்லை.

இஸ்ரேலின் மீது அமெரிக்கா சில வகையான அழுத்தங்களைத் தக்கவைக்க ஹமாஸ் படை உயிரோட்டத்துடன் இருப்பது மிகவும் அவசியமானதாகும், எனவே ஹாமாஸ் அமைப்பை ஒழிக்க அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எப்பொழுதும் இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்காவில் அதிகாரத்தில் யாருடைய அரசு இருந்தாலும் அதில் யூதர்களின் ஆதிக்கம் இருக்கும் என்பது மறைமுக உண்மையே. அது தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தலைவரையே அது விரும்புகிறது.

இறுதியாக, பைடன் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி ஆட்சி அரியணையை ஏற இஸ்ரேலுக்கான தனது ஆதரவை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு தேவைப்பட்டால் நெதன்யாகு பலி ஆடாக மாறக் கூடும் என்பதே நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க: பாகிஸ்தானின் நட்பை தேடும் அமெரிக்கா? ஈரானுடன் சுமூக தீர்வு காண சுத்திவளைப்பு திட்டமா? இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? - US Pakistan Relations

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.