ETV Bharat / state

கோவில்பட்டியில் பாரம்பரிய விளையாட்டுடன் களைகட்டிய பொங்கல் திருவிழா

author img

By

Published : Jan 10, 2020, 1:12 PM IST

பாரம்பரிய விளையாட்டுடன் களைகட்டிய பொங்கல் திருவிழா
பாரம்பரிய விளையாட்டுடன் களைகட்டிய பொங்கல் திருவிழா

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழர்களின் மேன்மையை பறைசாற்றும் பாரம்பரிய கூட்டுக் குடும்ப பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நவீன காலத்தில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் போன்று வேடமணிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மாவிலைத் தோரணம், மங்கலப் பொருள்களுடன் மங்கள வாத்தியம் இசைக்க பொங்கலோ பொங்கல் என்ற முழக்கத்துடன் மாணவர்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மேலும், பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், பல்லாங்குழி, பம்பரம், தாயம் உறியடித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

பாரம்பரிய விளையாட்டுடன் களைகட்டிய பொங்கல் திருவிழா

இதையடுத்து கண்களுக்கு குளிர்ச்சி தரும்விதமாக ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் என மாணவ, மாணவிகள் ஆடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரளான ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!

Intro:கோவில்பட்டியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி ,பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய பொங்கல் திருவிழா

Body:கோவில்பட்டியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி ,பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய பொங்கல் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்எம் வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழர்களின் மேன்மையை பறைசாற்றும் பாரம்பரிய கூட்டுக் குடும்ப பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒயிலாட்டம் ,கரகாட்டம், கும்மியாட்டம் என கலை நிகழ்ச்சிகளும், சிலம்பம், பல்லாங்குழி. பம்பரம். தாயம் உறியடித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்எம் வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழர்களின் மேன்மையை பறைசாற்றும் பாரம்பரிய கூட்டுக் குடும்ப பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நவீன காலத்தில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் போன்று வேடமணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவிலைத் தோரணம், மங்கலப் பொருட்களுடன் மங்கள வாத்தியம் முழங்க பொங்கலோ பொங்கல் என்ற முழக்கத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பரம்பரை விளையாட்டுக்களான சிலம்பம், பல்லாங்குழி. பம்பரம். தாயம் உறியடித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதமாக ஒயிலாட்டம் ,கரகாட்டம், கும்மியாட்டம் என மாணவ- மாணவிகள் ஆடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரளான ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.