ETV Bharat / bharat

உதவியாளரிடம் ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்! பணமோடி வழக்கில் ஜார்கண்ட் அமைச்சர் கைது! - Jharkhand Minister arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 7:31 AM IST

பணமோடி வழக்கில் ஜார்கண்ட் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஆலம்கிர் ஆலம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Jharkhand Minister Alamgir Alam (ANI Photo)

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. ஜார்கண்ட் அமைச்சரவையில் காங்கிரஸ் தலைவர் ஆலம்கீர் ஆலம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரின் உதவியாளர் மற்றும் அவரது பணியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 32 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் அவரது உதவியாளர் சஞ்சீவ் லால், மற்றும் பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தினர். மேலும், இருவரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஜாராகி விளக்கம் அளிக்குமாறு ஆலகீர் ஆலமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ஏற்று ஆலம்கீர் ஆலம் கடந்த செவாய்கிழமை (மே.14) விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் ஏறத்தாழ 10 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்றும் (மே.15) அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காததை அடுத்து அவரை கைது செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் அமைச்சர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மக்களவை தேர்தல் நடந்து வரும் நேரத்தில் புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக மிரட்டி வருவதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சஞ்சீவ் லால், ஜஹாங்கீா் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில் சில செல்வாக்குமிக்க நபா்களின் சாா்பில் லஞ்சப் பணத்தை பெறும் வேலையில் சஞ்சய் லால் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த முறைகேட்டில் பல அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளது என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜார்கண்ட் முதலமைச்சர் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய முதலமைச்சராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். தற்போது இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிய காங்கிரஸ் கட்சியின் ஆலம்கீர் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்! - Kanpur Bomb Threat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.