ETV Bharat / state

பழிக்குப் பழியாக இளைஞர் வெட்டி கொலையா..? மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..

author img

By

Published : Nov 1, 2022, 7:24 PM IST

நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி கொலை
நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி கொலை

சிவகங்கை அருகே நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவரது நண்பரது ஊரான மட்டாகுளத்தில் தங்கி வந்ததுடன், அங்குள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனை அறிந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று(அக்.31) நள்ளிரவில் அங்கு வந்ததுடன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரது தலையை வெட்டி சிதைத்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்ட கிராமத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி, சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இவர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Video:கோவையில் அரிவாளைக்காட்டி ரூ.10 லட்சத்தைப்பறிக்க முறன்ற இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.