ETV Bharat / state

சிறையில் ஏற்பட்ட முன்விரோதம் -  தேவகோட்டை இளைஞர் வெட்டிக்கொலை

author img

By

Published : Apr 4, 2022, 5:24 PM IST

இளைஞர் வெட்டிக்கொலை
இளைஞர் வெட்டிக்கொலை

சிவகங்கை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை: தேவகோட்டை புது தெருவைச் சேர்ந்தவர், உமர் பாரூக் (36). இவர் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறைசென்று கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 03) நள்ளிரவு தேவகோட்டை ஆற்றுப்பாலம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உமர் பாரூக்கின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலையாளியைத் தேடி வந்தனர்.

காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கொலை சம்பந்தமாக சிறுவாச்சி பகுதியைச் சேர்ந்த ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறையில் சிலரிடம் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: திருவிழாவில் பிரச்னை - பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட லத்தி சார்ஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.