ETV Bharat / state

குடிபோதையில் குளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 6, 2020, 3:05 PM IST

குளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
குளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

பெரம்பலூர்: குன்னம் அருகே குடிபோதையில் குளத்தில் தவறி விழுந்த இளைஞரின் சடலத்தை மீட்ட காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேவுள்ள வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரத்குமார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.

இந்நிலையில், அவர் இன்று (அக்.06) குடிபோதையில், அப்பகுதியிலுள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். பின்னர், அவரது சடலத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் தவறி விழுந்த சரத்குமாரின் உடலை மீட்டனர். பின்னர், அங்கிருந்த காவல் துறையினர் சரத்குமாரின் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சரத்குமார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதை இளைஞரிடம் டைம்பாஸ் செய்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.