ETV Bharat / state

’ஆக்சிஜன் செறிவூட்டிகள் கையிருப்பு உள்ளது’ - நாகை மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : May 7, 2021, 3:15 PM IST

Updated : May 8, 2021, 1:42 PM IST

நாகை காவல் கண்காணிப்பு அலுவலர்
நாகை காவல் கண்காணிப்பு அலுவலர்

நாகை மாவட்டத்தில் நான்கு நாள்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆலோசனைக் கூட்டம் இன்று(மே.07) நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், ”நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,414 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 935 கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமையில் இருக்கின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் நான்கு நாள்களுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள் கையிருப்பு உள்ளது” என்றார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் கையிருப்பு உள்ளது

தொடர்ந்து பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் கூறுகையில், “நாகை அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தட்டுப்பாடுகளைச் சமாளிக்க அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.

இக்கூட்டத்தில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரவின், முனியநாதன் ஐஏஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated :May 8, 2021, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.