ETV Bharat / state

'அணில்' அமைச்சர் 'ஆதார்' அமைச்சராகிவிட்டார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்

author img

By

Published : Nov 30, 2022, 11:52 AM IST

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே ஆதார் இணைக்க வேண்டும் என கூறுகிறார்கள் எனவும் அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராகி விட்டார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை: காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள கடைசி கிராமம் வரை ஊடுருவி நிர்வாகிகளை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக என அலசி, ஆராய்ந்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டு செல்வக்கில்லாமல் இருப்பதாக சொல்லும் கருத்து குருடர்களுக்கு அவரே சான்று என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது அண்ணன், தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்து கொண்டிருக்கிறார்கள். நம் தோழமையில் இருக்கிறவர்கள் நம்மைப்பற்றி இழிவாக பேசுவது மன வருத்தமளிக்கிறது. நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்சமாட்டோம். எங்கள் மேல் தூண் விழுந்தாலும் துரும்பை கொண்டு எறிவோம், எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பா விட்டால் ஆற்றிலே விட்டு விடுவோம், அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என கூறினார்.

நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய தமிழ்நாட்டில் திமுக பேச்சாளர் சைதை சித்திக் பெண்களை தரம் தாழ்ந்து பேசுகிறார். அதை திமுக தலைவர்கள் கண்டித்தார்களா? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் குட்டிச்சுவராகப் போய்விட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். கேட்கின்றவன் ஏமாளியாக இருந்தால், எருமை ஏரோபிளைன் ஒட்டுகிறது என்பார்களாம். அப்படி இருக்கிறது முதலமைச்சர் பேச்சு. முதலமைச்சராகும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை எதிர்க்கட்சித் தலைவராக தான் தகுதி உண்டு என்றார்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறுகிறார் நிதியமைச்சர், அப்படி ஊழல் நடந்திருந்தால் 2 வருடத்தில் நிரூபித்து இருக்கலாமே? 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே ஆதார் இணைக்க வேண்டும் என கூறுகிறார்கள். அணில் அமைச்சர் இப்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என கிண்டலாக பேசினார்.

கட்சிக்கு அப்பாற்பட்டு நிதி அமைச்சரின் தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு நாங்கள் மரியாதை கொடுப்போம், அவருக்கு பிறந்த மகனா என்பது போல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கமிஷன் கேட்கிறார். தாதக்களை உருவாக்கி விட்டார் என தெரிவித்தார்.

ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது மன்னர் பிடில் வாசித்தது போல், தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது மகன் நடித்த திரைப்படத்தை பார்த்தீர்களா என்று அமைச்சரிடம் விசாரிப்பது என்ன நியாயம்? இதற்காக தான் மக்கள் உங்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்களா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசல்: சிரித்தபடியே ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.