ETV Bharat / state

ஈரோடு:மின் கம்பத்தை சரிசெய்யும் பணியின் போது மின்சாரம் தாக்கி கேங்கேன் பலி; மின்சார ஊழியர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 7:54 PM IST

மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஊஞ்சப்பாளையம் பட்டறைமேடு பகுதியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய கேங்மேன் மின் கம்பத்தில் உயிரிழந்த சம்பவத்தில், நாமக்கல் மின்சார வாரியத்தில் கேங்க் மேனாக பணிபுரியும் பூபதி கைது செய்யப்பட்டார்.

மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஊஞ்சப்பாளையம் பட்டறை மேட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 34 வயதான இவர் பெருந்துறை மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். சுரேஷ்குமாருக்கு விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த போது அந்த பகுதியில் மின் தடை ஏற்படவே, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின் தடையைச் சரி செய்ய சுரேஷ்குமாரை அழைத்துள்ளார். அந்தப் பகுதி மின்வாரிய ஊழியர் விடுமுறை என்பதால் சுரேஷ்குமார் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து விட்டு மின் கம்பத்தில் ஏறி மின் தடையைச் சரி செய்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக யாரோ டிரான்ஸ்பார்மரை ஆன் செய்யவே, மின் கம்பத்திலேயே சுரேஷ்குமார் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ்குமார் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தபோது மாக்கினாங்கோம்பை, மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் மின்கம்பத்தில் ஆள் வேலை செய்வது தெரியாமல் டிரான்ஸ்பார்மரை ஆன்(ON) செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பூபதியைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், பூபதி கடந்த 2022 முதல் நாமக்கல் மின்சார வாரியத்தில் கேங்க் மேனாக பணி புரிந்து வந்ததும், சுரேஷ் மின்கம்பத்தில் ஏரி மின்தடை சரிசெய்ய டிரான்ஸ்பார்மரை ஆப் செய்த போது பூபதி வசிக்கும் பகுதியான மங்காளபுரம் காலனி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதனைச் சரி செய்யச் சென்ற போது டிரான்ஸ்பார்மர் ஆப் செய்துள்ளதைக் கண்ட பூபதி டிரான்ஸ்பார்மரை ஆன் செய்ததும் தெரிய வந்தது.

மேலும் பூபதி டிரான்ஸ்பார்மரை ஆன் செய்யும்போது ட்ரான்ஸ்பார்மரில் மீண்டும் மின்தடை ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பூபதி மின்கம்பங்களைச் சோதனை செய்துள்ளார், அப்போது மின்கம்பத்தில் சுரேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பூபதி மின்கம்பத்தில் ஏறி உயிரிழந்த சுரேஷின் உடலை அங்கிருந்து மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட பூபதியை கடத்தூர் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி- நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.