ETV Bharat / city

கோவை பள்ளி மாணவி தற்கொலை - 13 பேரிடம் விசாரணை

author img

By

Published : Nov 18, 2021, 9:22 PM IST

கோவை பள்ளி மாணவி தற்கொலை
கோவை பள்ளி மாணவி தற்கொலை

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் 13 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணை நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரஸ்வதி ரெங்கசாமி, 13 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தேடப்பட்ட மருத்துவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.