ETV Bharat / bharat

ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணைக்குப் பிறகு தான் நடந்ததை கூறமுடியும்!

author img

By

Published : Aug 9, 2020, 5:17 PM IST

Kerala Plane Crash
Kerala Plane Crash

டெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்திய பின்னரே என்ன நடந்தது என்பதைக் கூற முடியும் என்று டிஜிசிஏ (Directorate General of Civil Aviation) இயக்குநர் ஜெனரல் அனில் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனில் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

முழுமையான விசாரணையை நடத்திய பின்னரே, சரியாக என்ன நடந்தது என்பதைக் கூற முடியும். மீட்கப்பட்ட கறுப்புப்பெட்டிகளிலிருந்து அனைத்துத் தரவுகளும் கிடைக்கும். விமானத்தின் அசல் கருவிகளை ஆய்வு செய்வதற்கும் குறைபாடுகளை சரிபார்க்கவும் நாங்கள் போயிங்குடன் பேசப் போகிறோம்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO - International Civil Aviation Organization) வகுத்த வழிகாட்டுதல்களின்படி, இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன அமைப்பு, விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) விசாரித்து வருகிறது.

இந்த விபத்து விமானம், விமான நிலையம், மனிதப் பிழை, மழை காரணமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. மங்களூரு விமான விபத்துக்குப் பிறகு, ஒரு குழு ஓடுபாதைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கின.

கோழிக்கோடு ஓடுபாதையைப் பொறுத்தவரை, அதன் நடைபாதை வலிமையை மேம்படுத்தவும், அதன் ஓடுபாதை மற்றும் பாதுகாப்புப் பகுதியை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India - AAI), 2016ஆம் ஆண்டில் ஓடுபாதையை மறுசீரமைத்து, வலுப்படுத்தல் செய்தது. இந்தச் சம்பவத்தில் இரண்டு விமானிகள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், நான்கு கேபின் குழு உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முழு அளவிலான சர்வதேச விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா தொற்றின் நிலையைப் பொறுத்தது. பல நாடுகள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றன. முழுமையான சர்வதேச விமான சேவைகளைப் பெறுவதற்கு சிறிது காலம் ஆகும்.

சில சர்வதேச விமான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. பயணிகள் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கரோனா தொற்று காரணமாக, உலகில் வழக்கமான திட்டமிடப்பட்ட விமானங்களை மீண்டும் தொடங்குவதற்காக, இந்தியா சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.