தமிழ்நாடு

tamil nadu

5 ஆண்டுகளில் 25 ஆயிரம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி.. எங்கு தெரியுமா?

By

Published : Jul 13, 2023, 8:06 AM IST

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், பிரபல பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Sastra University
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம்

5 ஆண்டுகளில் 25 ஆயிரம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி

தஞ்சாவூர்: பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள், இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பஜாஜ் ஆட்டோவின் VP-CSR சுதாகர் கூறுகையில் "2026ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 33 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை என்று வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் (ASDC) தீர்மானித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் முக்கியமான பங்குதாரராக உள்ளது. மேலும், இந்தியாவில் 10 சிறந்த மையங்கள் அமைத்து சிறப்பான தொழில் பயிற்சினை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் சாஸ்த்ரா பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மூன்றாவது மையம் ஆகும். இம்மையம் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் உள்பட புகழ் பெற்ற 20 விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட மேம்பட்ட பயிற்சி வசதிகளை உள்ளடக்கியது.

மெகாட்ரானிக்ஸ், சென்சார்கள் மற்றும் கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய நான்கு வளர்ந்து வரும் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தது 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள்" என கூறினார்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துணைவேந்தர் டாக்டர்.வைத்திய சுப்பிரமணியம் கூறும்போது, சாஸ்த்ரா தனது திறன்களை சிறப்பாக பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாஸ்த்ராவில் உள்ள மையம் பத்தில் முதன்மையானதாக மாற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையத்தில் ரூ.30 கோடிக்கு மேல் முதலீடு செய்வதால், மாணவர்களுக்கு அதிநவீனமான மற்றும் விவேகமான பயிற்சி சூழல் வழங்கப்படும் என தெரிவித்தார். பஜாஜ் ஆட்டோமொபைல் சார்பாக சிஎஸ்ஆர் தலைவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மேலும் சமூக - பொருளாதார ரீதியாக பின் தங்கிய பட்டதாரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களைப் பற்றியும் விளக்கினார். ஸ்னேகா கோன்ஜ், மேலாளர் – Assessment மற்றும் Monitoring மற்றும் விஜய் வாவேரே, கோட்ட மேலாளர் – Skilling CSR, சாஸ்த்ராவின் டீன்கள் மற்றும் அசோசியேட் டீன்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Ghost Train : அதிபர் புதினின் "பேய் ரயில்"... என்னதான் இருக்கு அப்படி?

ABOUT THE AUTHOR

...view details