தமிழ்நாடு

tamil nadu

இளைஞர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை

By

Published : Aug 22, 2021, 10:44 PM IST

குடிபோதையில் இளைஞர் வெட்டிக் கொலை
குடிபோதையில் இளைஞர் வெட்டிக் கொலை

குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்டத் தகராறில் இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ரனர்.

காஞ்சிபுரம்:விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர், பிரேம்குமார் (26). குடி, கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அடிதடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்து வருவதாகத் தெரிகிறது.

இவர், நேற்றிரவு (ஆக.22) விப்பேடு மாரியம்மன் கோயில் தெருவில், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இளைஞர் வெட்டிக் கொலை

அப்போது, குடிபோதையில் இருந்த நண்பர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பிரேம்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரேம்குமாரை கொலை செய்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முதற்கட்டமாக, முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இரு தினங்களுக்கு முன்பு மனைவி வீட்டார் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details