தமிழ்நாடு

tamil nadu

கீழே கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி

By

Published : Sep 28, 2021, 10:23 AM IST

கோவையில்
கோவையில்

கோவையில் கீழே கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு பொன்னாடை அணிவித்து போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் கேஜி சாவடி சோனா பேக்கரி அருகே கருப்புசாமி என்பவர் ரூ. 20,000 மதிப்பிலான செல்போனை கீழே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற மூதாட்டி கருப்பம்மாள்(60) என்பவர் பார்த்துள்ளார்.

இதனையடுத்து அந்த செல்போனை எடுத்த மூதாட்டி, கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த செல்போன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

60 வயதிலும் யாரோ தவறவிட்ட பொருளை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியின் செயலை பாராட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணனன் உள்ளிட்டோர் மூதாட்டிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details