தமிழ்நாடு

tamil nadu

'விருப்ப ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியப்பலன்கள் கிடையாது!' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

By

Published : Aug 5, 2022, 7:17 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

விருப்ப ஓய்வு திட்டத்தில் பணியை துறந்தவருக்கு ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்க மறுத்த கனரா வங்கியின் முடிவு சரியானதே என சென்னை தெரிவித்துள்ளது.

சென்னை:கனரா வங்கியில் 1984ஆம் ஆண்டு எழுத்தராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பணியைத் துறந்தார்.

இந்நிலையில் கடந்த 1995ஆம் ஆண்டு கனரா வங்கி பென்சன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ், 1995ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு அமல்படுத்திய பென்ஷன் திட்டத்தில், தன்னையும் சேர்க்க கனரா வங்கிக்கு உத்தரவிடக்கோரி 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விருப்ப ஓய்வுத்திட்டத்தின் கீழ் பணியை விட்டுச்சென்றபோது, 'சேம நல நிதி(Provident Fund)' திட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுத்ததால் பென்சன் திட்டத்தை அவருக்கு அமல்படுத்த முடியாது என கனரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்காக மட்டும் கனரா வங்கி பிறப்பித்த திட்டம் ராஜினாமா செய்தவருக்குப் பொருந்தாது; வங்கியின் நிலைப்பாடு சரி எனக் கூறி, குணசேகரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details