தமிழ்நாடு

tamil nadu

ஈபிஎஸ் குறித்து கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 6:16 PM IST

edappadi Vs Udhayanidhi stalin: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் அவருக்கு எதிரான கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக உதயநிதிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, பெருமழை பாதிப்பு காரணமாக வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்படாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, உதயநிதிக்கு எதிரான இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமீர் கான்.. படகில் சென்று மீட்ட வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details