ETV Bharat / state

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான்.. படகில் சென்று மீட்ட வீரர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 5:05 PM IST

Updated : Dec 5, 2023, 11:08 PM IST

Actor Aamir Khan: சென்னையில் தனது அன்னையின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கும் இந்தி நடிகர் ஆமிர் கான் வெள்ளத்தில் சிக்கியதாகவும், பின்னர் மீட்புக்குழுவினர் உதவியுடன் அவர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Aamir Khan
Actor Aamir Khan

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலையில் விழுந்து பெரும் சேதத்துக்குள்ளாகின. பிரதான சாலைகளில் நீர் தேங்கியதால் சென்னை மாநகரமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது.

இந்நிலையில், தற்போது புயல் சென்னையை கடந்து ஆந்திர பகுதியில் கரையை கடந்துள்ளது. சென்னையில் மழை நின்ற நிலையில், பல இடங்களிலும் தேங்கி நின்ற மழை நீர் வடியத்துவங்கியது. மேலும், தடை செய்யப்பட்டு இருந்த மின் விநியோகமும் சீர் செய்யப்பட்டு வரும் ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.‌ ஆனாலும் பல இடங்களில் நீர் இன்னும் வடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  • Thanks to the fire and rescue department in helping people like us who are stranded

    Rescue operations have started in karapakkam..
    Saw 3 boats functioning already

    Great work by TN govt in such testing times

    Thanks to all the administrative people who are working relentlessly https://t.co/QdoW7zaBuI pic.twitter.com/qyzX73kHmc

    — VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டைச் சுற்றி வெள்ள‌நீர் சூழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உதவி கோரி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் இருக்கும் காரப்பாக்கம் பகுதிக்கு விரைந்த தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் விஷ்ணு விஷாலை பைபர் படகு மூலம் மீட்டனர். அந்த படகில் அவரது மனைவி ஜூவாலா கட்டா மற்றும் வளர்ப்பு நாயையும் மீட்டனர். தொடர்ந்து, விஷ்ணு விஷால் மீட்கப்பட்டப் பின்பு, அவர் மீட்கப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான் மீட்ட தீயனைப்பு துறையினர்
சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான் மீட்ட தீயனைப்பு துறையினர்

அந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் போல் ஒருவன் இருப்பதை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் அமீர் கான் எப்படி சென்னையில் என்று பதிவிட்டு வருகின்றனர். நடிகர் ஆமீர் கானின் அம்மா ஜீனத் ஹுசைனுக்கு கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதையடுத்து தற்காலிகமாக சென்னைக்கு இடம் பெயர்வதாக நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி அவரது தாயின் மருத்துவ சிகிச்சையை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் நேற்று(டிச.5) பெய்த பெருமழையில் அமீர் கான் சிக்கியுள்ளார். ஆனால் முன்னதாக விஷ்ணு விஷால் உதவி கேட்டு பதிவிட்ட எக்ஸ் பதிவில் அவர் ஆமீர் கான் குறித்து எதுவும் கூறாததாலும், அதேபோல் மீட்கப்பட்ட போதும் ஆமீர்‌கான் குறித்து எதுவும் பேசாததனால் ரசிகர்களுக்கு அது ஆமீர் கான் தானா என்ற‌ சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அது ஆமீர்கான் தான் என்று உறுதியானது. அவரது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த அமீர்கான் சென்னை வெள்ளத்தில் சிக்கிய நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்.. டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலையில் விழுந்து பெரும் சேதத்துக்குள்ளாகின. பிரதான சாலைகளில் நீர் தேங்கியதால் சென்னை மாநகரமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது.

இந்நிலையில், தற்போது புயல் சென்னையை கடந்து ஆந்திர பகுதியில் கரையை கடந்துள்ளது. சென்னையில் மழை நின்ற நிலையில், பல இடங்களிலும் தேங்கி நின்ற மழை நீர் வடியத்துவங்கியது. மேலும், தடை செய்யப்பட்டு இருந்த மின் விநியோகமும் சீர் செய்யப்பட்டு வரும் ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.‌ ஆனாலும் பல இடங்களில் நீர் இன்னும் வடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  • Thanks to the fire and rescue department in helping people like us who are stranded

    Rescue operations have started in karapakkam..
    Saw 3 boats functioning already

    Great work by TN govt in such testing times

    Thanks to all the administrative people who are working relentlessly https://t.co/QdoW7zaBuI pic.twitter.com/qyzX73kHmc

    — VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டைச் சுற்றி வெள்ள‌நீர் சூழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உதவி கோரி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் இருக்கும் காரப்பாக்கம் பகுதிக்கு விரைந்த தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் விஷ்ணு விஷாலை பைபர் படகு மூலம் மீட்டனர். அந்த படகில் அவரது மனைவி ஜூவாலா கட்டா மற்றும் வளர்ப்பு நாயையும் மீட்டனர். தொடர்ந்து, விஷ்ணு விஷால் மீட்கப்பட்டப் பின்பு, அவர் மீட்கப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான் மீட்ட தீயனைப்பு துறையினர்
சென்னை வெள்ளத்தில் சிக்கிய இந்தி நடிகர் ஆமிர் கான் மீட்ட தீயனைப்பு துறையினர்

அந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் போல் ஒருவன் இருப்பதை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் அமீர் கான் எப்படி சென்னையில் என்று பதிவிட்டு வருகின்றனர். நடிகர் ஆமீர் கானின் அம்மா ஜீனத் ஹுசைனுக்கு கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதையடுத்து தற்காலிகமாக சென்னைக்கு இடம் பெயர்வதாக நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி அவரது தாயின் மருத்துவ சிகிச்சையை பார்த்து வந்தார். இந்த நிலையில் தான் நேற்று(டிச.5) பெய்த பெருமழையில் அமீர் கான் சிக்கியுள்ளார். ஆனால் முன்னதாக விஷ்ணு விஷால் உதவி கேட்டு பதிவிட்ட எக்ஸ் பதிவில் அவர் ஆமீர் கான் குறித்து எதுவும் கூறாததாலும், அதேபோல் மீட்கப்பட்ட போதும் ஆமீர்‌கான் குறித்து எதுவும் பேசாததனால் ரசிகர்களுக்கு அது ஆமீர் கான் தானா என்ற‌ சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அது ஆமீர்கான் தான் என்று உறுதியானது. அவரது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த அமீர்கான் சென்னை வெள்ளத்தில் சிக்கிய நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்.. டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?

Last Updated : Dec 5, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.