தமிழ்நாடு

tamil nadu

மக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்..அதிகாரிகளுக்கு சேலம் ஆட்சியர் வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 2:58 PM IST

salem collector: மக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று சேலம் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி

சேலம்:சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இரா.பிருந்தா தேவி இன்று (ஜன. 29) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர், "பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில், அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்” என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 412 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், மாவட்ட ஆட்சியரக தரை தளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று நடத்தப்படும் குறைதீர் முகாமில், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 16 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளி மாணவருக்கு ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான அதிநவீன பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:"சங்கி என்பது கெட்ட வார்த்தை அல்ல" - மகளின் பேச்சுக்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details