தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா கவுர் நகரில் தொழிலதிபர் அனில் சவுகான் என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது அவரை இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அவர் நல்வாய்ப்பாக தப்பித்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ ஆதாரத்தைக்கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.