வீடியோ: கோவை அருகே வீட்டுக்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை
கோவை: சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் நேற்றிரவு ஒற்றை யானை கதிர்நாயக்கன்பாளையம் செல்லும் வழியில் விவசாயி ஒருவரது வீட்டுக்குள் நுழைய முற்பட்டது. சில நிமிடங்களுக்கு பின் அங்கிருந்து சென்றது.