திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த ஓர் ஆண்டாக தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஶ்ரீதர் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.