திருச்சி அடுத்த ஆங்கியம் கரடு பகுதி குகை ஒன்றின் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த இளைஞரை குகைக்குள் இருந்த சிறுத்தை தாக்கியது.இதில் இளைஞரை காப்பாற்ற சென்ற விவசாயி உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் வௌியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.