அழகு சூழ் மலை முகடுகள்...கண்ணுக்கு இதமான காட்சி தரும் கொடைக்கானல்!
’மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வந்த நிலையில், தற்போது குளு குளுவென சூழல் நிலவி வருகிறது. கண்ணுக்கு இதமாக காட்சி தரும் வகையில், கொடைக்கானலில் உள்ள மலைமுகடுகள் அனைத்தும் பச்சை பசேல் என்று பசுமைப் போர்வை போர்த்தியது போல் அழகு மிகுந்து காணப்படுகிறது.