“கடைசியில இதயும் விட்டு வைக்கலயா..” வாணியம்பாடியில் சைக்கிளை திருடும் சிசிடிவி காட்சிகள்! - bicycle theft in vaniyambadi

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 10:00 PM IST

thumbnail
சைக்கிளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி (Credits -ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, யாசின் தெருவைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். 

இந்த காட்சிகள் அங்கு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், இச்சம்பவம் குறித்து முகமது சலீம் சிசிடிவி காட்சிகளுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம், செல்போன் என தொடர்ந்து திருடு போகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வரும் நிலையில், அதே வரிசையில் தற்போது சைக்கிளைக்கூட விட்டு வைக்காமல் திருடிச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.