பூத்துக்குலுங்கும் வண்ணமலர்கள்...புன்னகையோடு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்..!
நீலகிரி: உதகையில் புதியதாக திறக்கபட்டுள்ள கர்நாடக பூங்காவில் பிரமாண்ட பசுமை குடிலில் 40 ஆயிரம் மலர்த்தொட்டிகளை சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக வைத்துள்ளனர். இதனிடையே குளிர் கால மலர்க்கண்காட்சியை நடத்தவும், தொங்கும் பாலம் அமைக்கவும் பூங்கா நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.