ஈடிவி பாரத் செய்தி எதிரொலி:தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் அரசாணை ரத்து
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின்வாரிய உதவியாளர் பணியிடங்கள் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை பின்புலத்துடன் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிட்டது,ஈடிவி பாரத் தமிழ்நாடு டிஜிட்டல் தளம்... இதனால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன. நிலைமையின் வீரியத்தை உணர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் எஸ். தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்து, மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் எனும் அரசாணையை ரத்து செய்வதாக அறிவித்தார்.
Last Updated : Dec 23, 2020, 6:44 AM IST
TAGGED: