சென்னையில் கனமழை: குளம் போல் காட்சியளிக்கும் சாலைகளால் மக்கள் அவதி...!
சென்னையில் கனமழை காரணமாக வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஜோதி வெங்கடாசலம் தெருவில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்லக்கூடிய காவலர்களின் வாகனங்கள், நீரில் மூழ்கியுள்ளன. மோட்டார் மூலம் மாநகராட்சி துறையினர் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதேபோல் வேப்பேரி நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.