வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: திமுகவை எதிர்த்துப் பிற கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகராட்சி 57ஆவது வார்டில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரம் ஏற்கனவே உடைக்கப்பட்டிருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இருப்பதாகவும், இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திமுகவை எதிர்த்து, பிற கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST