அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய கோவில் பூசாரி
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்புசாமி மற்றும் கள்ளழகர் கோயில் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விழா நாளான தீ மிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இத்திருவிழாவின் போது கோவில் பூசாரி ஒருவர் அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவினார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST