Ganesh Chaturthi in Dindigul: ஆசியாவிலேயே ஒரே கல்லில் ஆன 32 அடி உயர விநாயகர்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 1:22 PM IST

thumbnail

திண்டுக்கல்: இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப். 18) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திரம் கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் உள்ள சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

ஆசியக் கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பல வண்ணங்களால் செய்யப்பட்ட மின்விளக்கு அலங்காரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு சிறப்பு ஆராதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதேபோல் வல்ல கணபதி, மகா கணபதி, சங்கடஹர சதுர்த்தி விநாயகர் மற்றும் வெள்ளை விநாயகர் என ஒற்றையடி உயரத்தில் உருவாக்கப்பட்ட 108 விநாயகர் சிலைகளும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

மேலும் கோயிலுக்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விநாயகர் முன்பு நின்று தங்களது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.