காட்டெருமை கன்றினை கண்காணிக்கும் வனத்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலின் மத்தியில் உள்ள கரடிச்சோலை குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டெருமைக் கூட்டம் ஒன்று முகாமிட்டிருந்தது. அக்கூட்டத்தில் கருவுற்ற சினை எருமை ஒன்று இருப்பது அப்பகுதி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சினை எருமை நேற்று கன்றினை ஈன்றது. தகவல் அறிந்த வனத்துறையினரும் நேற்று (அக்-3) முதல் அப்பகுதியில் முகாமிட்டு, காட்டெருமை கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST