ETV Bharat / state

தொடர் மழை காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல தடை

author img

By

Published : Nov 15, 2020, 10:11 AM IST

சதுரகிரி
சதுரகிரி

விருதுநகர்: தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கடந்த காலங்களில் சதுரகிரி கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மாதத்திற்கு எட்டு நாள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, அமாவாசையையொட்டி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அளித்த அனுமதியை வனத்துறையினர் ரத்து செய்தனர். இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க:சதுரகிரி மலைக்கு அத்துமீறி நுழைந்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.