இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதூரை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருவதற்கு முன்பு தற்பாதுகாப்பு, பொதுசுகாதாரத்துக்காக கண்டிப்பாக முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்.
கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்களையோ அல்லது தாங்களாகவே வீட்டில் பருத்தித் துணியால் தயாரித்த சாதாரண முகக்கவசங்களையோ பயன்படுத்தலாம்
அரசு அறிவுறுத்தலையும் மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அபராதம் வாங்கிவிட்டு முகக்கவசம் வழங்கும் மாநகராட்சி அலுவலர்கள்!