ETV Bharat / state

அபராதம் வாங்கிவிட்டு முகக்கவசம் வழங்கும் மாநகராட்சி அலுவலர்கள்!

author img

By

Published : Apr 17, 2020, 6:14 PM IST

குமரி: நாகர்கோவிலில் மாஸ்க் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கும், எச்சில் துப்புபவர்களுக்கும் 50 ரூபாய் அபராதத்தை விதிக்கும் மாநகராட்சி அலுவலர்கள், அந்த அபராத பணத்தில் அவர்களுக்கே மாஸ்க் வழங்கி வருகிறர்கள்.

கண்காணிப்பில் காவல்துறையினர்
கண்காணிப்பில் காவல்துறையினர்

கரோனா தடை உத்தரவுக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆயிரம் பாதுகாப்பு உடைகள் இன்று வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இதன் செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த உடைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கும், சாப்பாடு வழங்கும் ஊழியர்களுக்கும், சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அபராதம் வாங்கிவிட்டு முகக்கவசம் வழங்கும் மாநகராட்சி அலுவலர்கள்

இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மாஸ்க் இல்லாமல் வருபவர்களுக்கு 50 ரூபாய் அபராதமும், சாலை மற்றும் தெருக்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இவ்வாறு மாஸ்க் இல்லாமல் வருபவர்களிடம் ரூ.50 வசூலித்துவிட்டு, அவர்களுக்கே ரூ.50 மதிப்புள்ள மாஸ்க்குகளை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: உத்தரவை மதிக்காத வங்கி... ஊரடங்கை மீறிய வாடிக்கையாளர்கள்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.