ETV Bharat / state

வீட்டில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சோகம்

author img

By

Published : Sep 29, 2020, 10:15 AM IST

மூதாட்டி
மூதாட்டி

விழுப்புரம்: ஏனாதிமங்கலம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (60) என்பவர் தனது குடிசை வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

villupuram-old-woman-crushed-to-death-due-to-walls-of-their-house-collapsed-in-rain
வீட்டில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சோகம்
மேலும் உயிரிழந்த சரோஜாவின் மகன் இளங்கோவன் (45) என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழையால் நெற்பயிர்கள், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இதையும் படிங்க: 43 ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று இலவசமாக தேசியக் கொடி வழங்கும் மூதாட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.