ETV Bharat / state

விவாகரத்தால் திருப்பி அனுப்பிய சீதனப் பொருட்கள்.. பார்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட கணவர் தரப்பு வழக்கறிஞர் - திருவள்ளூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 12:29 PM IST

Etv Bharat
Etv Bharat

Tiruvallur dowry issue: விகாரத்திற்குப் பிறகு மனைவிக்கு, கணவன் திருப்பி அனுப்பிய சீதனப் பொருட்கள் அடங்கிய பார்சலை ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாகக் கூறி, தனியார் பார்சல் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை கணவன் தரப்பு வழக்கறிஞர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்: கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (32) என்பவருக்கும், ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த (26) பெண்ணுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் கணவர், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

அதனால் கணவர் மனோஜ், கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் மனைவியிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. மனைவியும் கணவரை விவாகரத்து செய்வதற்கு ஒப்புக் கொண்டதால், திருமணத்திற்கு மனைவி கொண்டு வந்த சீதனப் பொருட்களை அவரிடம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனை அடுத்து, மனோஜ் வெளிநாடு செல்ல இருப்பதால், தனது தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் முகவரிக்கு, விவகாரத்து செய்த மனைவியின் சீதனப் பொருட்களான 25.6 கிராம் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 2.10 லட்சம் மதிப்புடைய பொருட்களை கோயம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் கொரியர் சேவை மூலம் கடந்த ஜூன் 30ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பார்சல் ஜூலை 4ஆம் தேதி அன்று, திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள அந்த தனியார் கொரியர் கிளைக்கு வந்துள்ளது. அந்த பார்சலை வழக்கறிஞர் ஜூலை 6ஆம் பெற்றுக் கொள்வதாகவும், அதற்கான கூடுதல் பணத்தை செல்த்துவதாகவும் கூறியதாக வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், அந்த கொரியர் சேவை நிறுவனம் அந்த பார்சலை, எந்தவித தகவல் அளிக்காமல் மேட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அது குறித்து மேட்டூரில் உள்ள அந்த கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, அத்தகைய பார்சல் அங்கு வரவில்லை என கூறியுள்ளனர்.

பின்னர் அந்நிறுவனம், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள கிளைக்கு சென்று விசாரிக்கும் படி கூறியது. அதன் அடிப்படையில், அங்கு சென்று விசாரித்த போது, அத்தகைய பார்சல் எதுவும் வரவில்லை என அந்த கொரியர் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து, கொரியர் சர்வீஸ் நிறுவனத்தின் மேட்டூர் மண்டல அலுவலர் ரமேஷ் என்பவர், வழக்கறிஞருக்கு தொடர்பு கொண்டு அத்தகைய கொரியர் பார்சலை தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது திருடி இருக்கக்கூடும் என்றும், அந்த பார்சலுக்கான 10 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் தரப்பினர், அந்த பார்சலில் இருந்த பொருட்களின் மதிப்பு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அந்த கொரியர் நிறுவனம் வழக்கறிஞர் தரப்பினரை தீபாவளி பண்டிகைகளுக்கு பிறகு மீண்டும் வந்து பார்க்குமாறு தனியார் கொரியர் சேவை நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட இந்நாள் வரை ஒப்படைக்கப்படாத காரணத்தில், வழக்கறிஞர் தரப்பினர் அந்த தனியார் கொரியர் சேவை நிற்வனத்தின், காக்களூர் கிளை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் திடீர் வெடிகுண்டு சோதனை.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.