ETV Bharat / state

பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய +2 மாணவி விபத்தில் பலி!

author img

By

Published : Mar 14, 2023, 11:37 AM IST

Thanjavur 12th student and her relative died in two wheeler accident
தஞ்சாவூர் இருசக்கர வாகன விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அவரது உறவினர் உயிரிழந்தனர்

தஞ்சை அருகே பொதுத்தேர்வு எழுதிவிட்டு உறவினருடன் வீடு திரும்பிய மாணவி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சாலை விபத்தில் +2 மாணவி பலி

தஞ்சாவூர்: தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் விஷாலி (16). இவர் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதி கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலையில் +2 படித்து வந்துள்ளார். மாணவி விஷாலி நேற்று (13.03.2023) காலை பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாலை தனது உறவினரான பிரதீப் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது நல்லிச்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த அவர்கள் சாலை வளைவில் திரும்பும்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியைகள், உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்துக் கதறி அழுதனர்.

காலையில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவியும், அவரது உறவினரும் சாலை விபத்தில் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அய்யம்பேட்டை போலீசார் அவர்கள் உடலை உடற்கூராய்விற்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இடைமறித்த காட்டு யானை - தலைகுப்புற கவிழ்ந்த வாகனஓட்டி.. திக் திக் நிமிடங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.