ETV Bharat / state

திருமண நாளில் தம்பதி உயிரிழப்பு! குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி..

author img

By

Published : Jun 26, 2023, 9:00 PM IST

திருமண நாளன்று கோயிலுக்கு சென்ற தம்பதி தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு
திருமண நாளன்று கோயிலுக்கு சென்ற தம்பதி தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே திருமண நாளன்று இருசக்கர வாகனத்தில் குழந்தையோடு கோயிலுக்குச் சென்ற தம்பதி தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு கடப்பந்தாங்கல் அருகே திருமண நாளை முன்னிட்டு தம்பதி, குழந்தை உள்ளிட்டோர் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவனும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஈஸ்வரன்-சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், ஈஸ்வரன் சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு இன்று திருமண நாள் என்பதால் இருவரும் அவர்களது 3 வயது ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பச்சயம்மன் கோயிலுக்குச் சென்றனர்.

அப்போது ஆற்காட்டில் இருந்து கலவை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இறக்கும் தருவாயிலும் கூட தம்பதி தன் 3 வயது ஆண் குழந்தையை சாலையோர செடி மீது வீசி காப்பாற்றி உள்ளனர்.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பை தாக்கினால் கொலை முயற்சியா? கர்நாடக உயர் நீதிமன்றம் திடுக் தீர்ப்பு!

விபத்தை தொடர்ந்து தகவலின் பேரில் ஈஸ்வரன் - சங்கீதா உறவினர்கள் விரைந்து சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்த உறவினர்கள் சம்பவ இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

பின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அவர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராத விதமாக தாய் தந்தை ஒரே நேரத்தில் உயிரிழந்ததால், இரு குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

உயிரிழந்த ஈஸ்வரனின் தந்தை வெங்கடேடன், தாய் மற்றும் சித்தப்பா பாலமுருகன் மற்றும் சங்கீதாவின் தாய் தந்தை ஆகியோர் உள்ளதால் அவர்களின் அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சாலை விபத்து எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றாக இருந்தாலும், அது ஒரு குடும்பத்தையே நிலைகுழைந்து விட்டது.

இதையும் படிங்க: யூ டர்ன் திரும்புவதில் குளறுபடி... பாதசாரியை மோதி நிற்காமல் சென்ற கார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.