ETV Bharat / state

500 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றை மூட கோரிக்கை!

author img

By

Published : Nov 5, 2019, 11:05 PM IST

aranthangi people request to close the unuse well

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உள்ள மேல் மங்கலம் கிராமத்தில் உள்ள 500 அடி ஆழம் கொண்ட பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேல் மங்கலம் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் 500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் ஆபத்தான முறையில் உள்ளது.

அப்பகுதி வழியாகக் குடிநீர் எடுக்கச் செல்பவர்களும், ஓடையில் குளிக்கச் செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.

ஆபத்தான வகையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு

மூடப்படாத இந்த ஆழ்துளைக் கிணற்றால் விபத்து நடப்பதற்கு முன்னரே அரசு நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் அந்த ஆழ்துளைக் கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது!

Intro:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 500 அடி ஆழமுள்ள பயன்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என மக்கள் கோரிக்கைBody:புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி அடுத்த மேலமங்கலம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் அதிகமா செல்லக் கூடிய குளத்துக் கரையில் 500 அடி ஆழ்துளை கிணறு எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி நடைபாதையில் இருக்கிறது மூடப்பட வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் கிராமத்தில் ரோட்டு ஓரமாக இருக்கக்கூடிய குளத்தின் கரையில் 500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று நடமாடும் பகுதியில் எந்த ஒரு பாதுகாப்பும்
இன்றி தரையோடு இருப்பதால் அவ்வழியாக குளிக்க
மற்றும் குடிநீர் எடுக்க செல்லும் குழந்தைகள்
மற்றும் முதியவர்கள் அச்சத்துடன்
செல்கின்றனர் விபத்து நடப்பதற்கு முன்னரே இந்த கிணற்றை மூட
வேண்டும் என்று அப்பகுதி பொது
மக்களின் கோரிக்கையாக
உள்ளது
சென்ற வாரம் அந்த ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி விழுந்து இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.