ETV Bharat / state

இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 12, 2021, 10:17 PM IST

இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு
இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகே இடி தாக்கியதில் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை , பிலிமிசை, பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் இடி தாக்கியதில் உயிரிழந்தன. இது அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இடி தாக்கி 22 ஆடுகள் பரிதாப உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.