ETV Bharat / state

மதுரை அருகே கி.பி.9, 13 மற்றும் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

author img

By

Published : Aug 18, 2021, 11:53 PM IST

மதுரை அருகே கி.பி.9, 13 மற்றும் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கண்மாய் மடை கல்வெட்டுகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-August-2021/12813854_kalvettu2.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-August-2021/12813854_kalvettu2.jpghttp://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-August-2021/12813854_kalvettu2.jpg

மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன்.

இவரது தலைமையில் பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், அந்த பகுதியில் கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

கல்வெட்டு அமைந்துள்ள மூன்று கண் மடை பகுதி
கல்வெட்டு அமைந்துள்ள மூன்று கண் மடை பகுதி

3 நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

இது குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது: வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இந்த ஊரின் மேற்கு பகுதியில் உள்ள பெரிய கண்மாயில், நீர் வெளியேறுவதற்கான மூன்று கண் மடை அமைந்துள்ளது.

முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் உள்ளன.

கல்வெட்டின் முதல் பகுதி
கல்வெட்டின் முதல் பகுதி

இந்த கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளது. இதனால் சொற்களின் பொருளை அறிய முடியவில்லை. பெரிய கண்மாய் மூன்றாவது கண் மடையில் வலது புற சுவரின் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

எடுத்து வரப்பட்ட கல்வெட்டு?

அதில், "சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன்" என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டினை படியெடுத்து தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஒய்வு பெற்ற முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது.

கல்வெட்டின் இரண்டாம் பகுதி பகுதி
கல்வெட்டின் இரண்டாம் பகுதி

ஆய்வில், எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும் அர்த்தம் என்பது தெரியவந்தது. கண்டறியப்பட்ட கல்வெட்டினை வேறு பகுதியில் இருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டு இருக்கலாம்” என்றார்.

இதையும் படிங்க: 'ஆகாயத் தாமரையிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பு' - பார்வையிட்டார் கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.