ETV Bharat / state

'ஆகாயத் தாமரையிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பு' - பார்வையிட்டார் கனிமொழி

author img

By

Published : Aug 18, 2021, 10:25 PM IST

ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்.

kanimozhi mp inspection  kanimozhi mp inspection on Handicrafts  Handicrafts  கைவினைப் பொருட்கள்  ஆகாய தாமரை  ஆகாய தாமரையிலிருந்து கைவினைப் பொருட்கள்  thoothukudi news  thoothukudi latest news  தூத்துக்குடி செய்திகள்
கனிமொழி

தூத்துக்குடி: மேலஆத்தூர் ஊராட்சி மன்ற மண்டபத்தில் கடந்த 15 நாள்களாக ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (ஆக 18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு 30 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

kanimozhi mp inspection  kanimozhi mp inspection on Handicrafts  Handicrafts  கைவினைப் பொருட்கள்  ஆகாய தாமரை  ஆகாய தாமரையிலிருந்து கைவினைப் பொருட்கள்  thoothukudi news  thoothukudi latest news  தூத்துக்குடி செய்திகள்
ஆகாய தாமரையிலிருந்து கைவினைப் பொருட்கள்

கைவினைப்பொருள்கள்

இந்நிகழ்ச்சியில் கனிமொழி பேசுயதாவது, 'ஆகாயத் தாமரை பொதுவாக ஆறு, நீர் நிலைகளை அழிக்கக்கூடியவை. அதனை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றிய சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள், குடும்பத் தலைவிகள், வேலையில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த கரோனா காலத்தில் நிறைய நபர்களுக்கு வேலையிழப்பு நேர்ந்தது. வேலை இல்லாத நபர்கள் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தனர்.

தற்பொழுது நம் நீர்நிலைகளை நாசமாக்கிக் கொண்டிருந்த ஆகாயத் தாமரையின் மூலம் பயன்பெறும் வகையில், அவற்றை மக்களுக்குப் பயனுள்ள கைவினைப்பொருள்களாக மாற்றி, நீரை நல்ல நிலைக்கு விவசாயிகள், பொதுமக்களின் குடிநீருக்கும் பயன்பெறும் வகையில் செய்கின்றனர்.

kanimozhi mp inspection  kanimozhi mp inspection on Handicrafts  Handicrafts  கைவினைப் பொருட்கள்  ஆகாய தாமரை  ஆகாய தாமரையிலிருந்து கைவினைப் பொருட்கள்  thoothukudi news  thoothukudi latest news  தூத்துக்குடி செய்திகள்
பார்வையிட்ட கனிமொழி

பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்

அனைத்து மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்துப் பெண்களும் இந்த முயற்சியை இத்தோடு மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். மலேசியாவில் ஆகாயத் தாமரையில் பர்னிச்சர்கள் செய்து அதனை அடுத்த நாட்டிற்கு விற்பனை செய்கிறார்கள்.

அதுபோல் நாமும் இந்த கைவினைப்பொருட்களை பொதுமக்கள் ஈர்க்கும் வகையிலான நல்ல பொருட்களாக தயாரித்து விற்பனை செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்டு வாழ்க்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அன்று கலைஞர் தொலைக்காட்சி, இன்று ஸ்டாலின் பேருந்து: சட்டப்பேரவையை அசரவைத்த உதயநிதியின் கன்னிப்பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.