ETV Bharat / state

அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்றவர்கள் சிறைப்பிடிப்பு

author img

By

Published : Aug 21, 2020, 3:47 PM IST

சிறைப் பிடிப்பு
சிறைப் பிடிப்பு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்ற அனுமன் சேனா நிர்வாகிகள் 11 பேர் உள்பட மூன்று விநாயகர் சிலையை காவல் துறையினர் சிறைப்பிடித்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 21) விநாயகர் சிலை வைப்பதற்காக அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் சரக்கு வாகனத்தில் 9 அடி விநாயகர் சிலை, 3 அடி விநாயகர் 2 சிலைகளுடன் ஊர்வலமாகத் திருப்பரங்குன்றம் பாதையில் சென்றுகொண்டிருந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா தலைமையிலான காவல் துறையினர் அனுமன் சேனை ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரையும், அவர்களிடமிருந்த மூன்று விநாயகர் சிலைகளையும் சிறைப்பிடித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.