ETV Bharat / state

காஞ்சிபுரம் ரவுடி ஹரியானாவில் கைது: அதிரடி காட்டிய காவல் துறை

author img

By

Published : Jan 21, 2022, 9:50 AM IST

காஞ்சிபுரம் ரவுடி ஹரியானாவில் கைது
காஞ்சிபுரம் ரவுடி ஹரியானாவில் கைது

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை, தனிப்படை காவல் துறையினர் ஹரியானா மாநிலத்தில் வைத்து துப்பாக்கி முனையில் கைதுசெய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் ரவுடிகளை ஒழிக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரையை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரவுடிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வலம்வந்த பிரபல ரவுடி படப்பை குணா தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் ஒரு பிரபல ரவுடி பொய்யா குளம் தியாகு என்கிற தியாகராஜன் (33). இவர் மீது 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள் உள்பட மொத்தம் 63 வழக்குகள் உள்ளன.

இவரும் தலைமறைவாக இருந்துவந்துள்ளார். இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், தியாகராஜனைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஹரியானா மாநிலத்திற்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர், தியாகராஜனைப் பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது காவல் துறையினர், அவரைத் துப்பாக்கி முனையில் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தியாகராஜனை ஹரியானாவிலிருந்து விமானம் மூலம் நேற்று (ஜனவரி 21) நள்ளிரவு சென்னை அழைத்துவந்தனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொள்வதாக காஞ்சிபுரம் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: விசாரணை என்ற பெயரில் துன்புறுத்திய காவலர் - அதிர்ச்சி வாக்குமூலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.