விசாரணை என்ற பெயரில் துன்புறுத்திய காவலர் - அதிர்ச்சி வாக்குமூலம்
மதுரை: பீ.பி. குளம், பி.டி. ராஜன் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (30). இவர் மது வைத்திருப்பதாக தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர், துன்புறுத்துவதாக குற்றஞ்சாட்டி ஈஸ்வரன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதுடன், இது தொடர்பாக காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.