ETV Bharat / state

காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு வரவேண்டிய குத்தகை பணம் ரூ.50 கோடியாம்!

author img

By

Published : Nov 1, 2019, 8:13 AM IST

Ekambareswarar temple lease issue

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் மூலம் வரவேண்டிய குத்தகை பாக்கித்தொகை 50 கோடி ரூபாயை விரைந்து வசூலிக்க வேண்டும் என்று பக்தர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உலகப்புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த திருக்கோயிலை பார்வையிட உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இக்கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் விளைநிலங்கள், இடங்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றியும், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள டெய்லர் சாலையிலும் ராயபுரம் பகுதியிலும் உள்ளன. கோயிலுக்குச் சொந்தமான இவ்விடத்தை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் குறைந்த வாடகை, குத்தைக்கு குடியிருப்போர், வணிகம் செய்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குத்தகைதாரர்களாக இருப்பவர்கள் பல ஆண்டுகளாக கோயிலுக்கு முறையாக குத்தகை செலுத்துவதில்லை. பலமுறை இது குறித்து இந்து சமய அறநிலைத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் வாடகை, குத்தகைப் பணம் முறையாகச் செலுத்துவதில்லை.

குத்தகை பாக்கி குறித்த விவரம்

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில், வாடகை பாக்கி உள்ள நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கோயில் வளாகத்தில் விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அறநிலையத் துறை சார்பில் நேற்று ஏகாம்பரநாதர் கோயில் வாயிலில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், அதன் குத்தகைதாரர், செலுத்த வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு பேனர்கள் வைத்தனர்.

அதில் குத்தகை பாக்கித்தொகை சுமார் 50 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக்கண்ட பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நாள்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே பூஜைகள், கோயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறப்பட்டவந்த நிலையில் இது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது.

இது குறித்து பேசிய பக்தர்கள், இதனை இப்படியே விடாமல் குறுகிய காலத்திற்குள் பாக்கித் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: எங்களை காப்பாற்றுங்கள்..! - எஸ்பியிடம் இளம்பெண் மனு!

Intro:
உலகப் புகழ்பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்கள் வைத்த குத்தகை பாக்கி சுமார் 50 கோடி என விவரத்தினை கோயில் வாசலில் விளம்பர பலகையில் இந்து சமய அறநிலைத்துறை வெளியிடப்பட்டதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்..
Body:
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.. நீர் நிலம் காற்று எனும் வகையில் மண் தலம் என புகழ்பெற்ற இந்த திருக்கோயிலில் பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வருவதுண்டு.. இந்நிலையில் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் விளைநிலங்களும் காஞ்சிபுரத்தின் சுற்றி பல கிராமங்களிலும், சென்னையில் புகழ்பெற்ற பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள டெய்லர் சாலை பகுதி மற்றும் ராயபுரம் பகுதியில் பல இடங்களும் இருந்து வருகிறது.. இதற்காக இதில் குடியிருப்போர் வணிகம் செய்வோர் உள்ளிட்டோருக்கு குறைந்த வாடகையில் குத்தகை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் விடப்பட்டுள்ளது..இதில் குத்தகைதாரர்கள் உள்ளவர் பல ஆண்டுகளாக திருக்கோயில்களுக்கு குத்தகையை முறையாக செலுத்துவதில்லை மேலும் குத்தகை தொகையை பெறப்பட்டுஅதனை வைத்து நாள்தோறும் பூஜைகள் மற்றும் திருக்கோயில் பராமரிப்பு உள்ளிட்டவைகள் செய்வது வழக்கம்.. பலமுறை இந்துசமய அறநிலையத்துறை இதுகுறித்து குத்தகைதாரர் எனக்கு நோட்டீஸ் அனுப்பியும் வாடகையை முறையாக செலுத்துவதில்லை .. இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விளைவாக வாடகை பாக்கி உள்ள நபர்களின் பெயர்களினை குறிபிட்டு திருக்கோயில் வளாகத்தில் விளம்பரப் பலகையை வைக்க உத்தரவிட்டதின் அதனடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறையினர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய திருக்கோயில் நுழைவு வாயிலில் இன்று மாலை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அதன் பரப்பு அதன் குத்தகைதாரர் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட விவரங்களை குறிபிட்டு பேனர்கள் வைத்தனர்..இந்த விளம்பரப் பலகையில் குத்தகை பாக்கி ஆக சுமார் 50 கோடி ரூபாய் திருக்கோயிலுக்கு வர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. நாள்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கொண்டே தற்போது பூஜைகளும் பராமரிப்பு செலவு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது.. Conclusion:தற்போது நிலையில் பெரும் பரபரப்பாக இருக்கும் சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள இடத்திற்கு கூட தற்போது தர வாடகை என்பது நூறில் ஒரு பங்கு ஆகும்.. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் குத்தகைதாரர்கள் விரைவாக பாக்கியினை குறுகிய காலத்திற்குள் செலுத்த அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.