ETV Bharat / state

'கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும்'

author img

By

Published : Apr 19, 2021, 7:53 PM IST

dmk-mla-request-to-collector
dmk-mla-request-to-collector

திண்டுக்கல்: கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட கரோனா தொற்று தீவிரமடைந்துவருகிறது. இதன் காரணமாக நாளை (ஏப். 20) முதல் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு கரோனா தொற்று காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவந்த கொடைக்கானல் மக்கள் கடந்த ஐந்து மாதங்களாகத் தொழில் செய்துவந்தனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருவதற்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் எனக் கூறி அனைத்துத் தரப்பு மக்களும் அறவழியில் கொடைக்கானலில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

எம்எல்ஏ செந்தில்குமார்

மேலும், பழனி சட்டபேரவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் இன்று (ஏப். 19) மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்து சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் அல்லது தளர்வை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று அரசுக்குத் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார். கொடைக்கானலில் கோட்டாட்சியர் தலைமையில் வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கோரி தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.