ETV Bharat / state

'ரஜினி காந்தின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்' - தொல். திருமாவளவன்!

author img

By

Published : Nov 8, 2019, 5:52 PM IST

thirumavalavan press meet

சென்னை: 'ரஜினிகாந்த் என் மீது காவிச் சாயம் பூச முயற்சி செய்கிறார்கள்’ என்று துணிச்சலுடன் கூறியதைப் பாராட்டுகிறேன் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அசோக் நகரில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அதில், உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடைபெறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், 'திருவள்ளுவர் எந்த மதம், சாதிக்கும் உரியவர் அல்ல. இதில் பாஜக மதச்சாயம் பூச பார்ப்பதை விசிக கண்டிக்கிறது. திருவள்ளுவரை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வள்ளுவர் படம் இருக்கும். தற்போது வள்ளுவருக்கு பதில் சாமி படங்கள் இருப்பதற்கு, தமிழ்நாடு அரசு தான் பொறுப்பு' என்றார்.

ரஜினி காந்த் குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருமா, 'ரஜினி காந்த் என் மீது காவிச் சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்ற கருத்தை விசிக சார்பில் நான் வரவேற்கிறேன். அவரின் துணிச்சலை வரவேற்கிறேன்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாழ்த்துகள். ஆனால், அதன் மூலம் பயன் இருக்குமா என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிவிக்க முடியும். திமுக - விசிக கூட்டணிக்கு இடையே விரிசல் என்ற செய்தி வதந்தி. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்பு, எவ்வளவு இடங்கள் வாங்கப்படும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்

இதனிடையே, வருகின்ற 11 ஆம் தேதி வள்ளுவர் சிலை அவமதிப்பு செய்தவரைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் நடக்கும் ஆர்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

Intro:Body:விசிக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை அசோக் நகரில் அக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் தற்போது நடைப்பெறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்று வருகின்றது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

திருவள்ளுவர் எந்த மதம், சாதிக்கும் உரியவர் அல்ல. இதை பிஜேபி செய்ய பார்பதற்கு விசக சார்பில் கடும் கண்டனம்.

திருவள்ளுவரை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது.

தமிழக போக்குவரத்து கழகத்தில் வள்ளுவர் படம் இருக்கும்..ஆனால் தற்போது வள்ளுவருக்கு பதில் சாமி படங்கள் இருப்பதற்கு தமிழக அரசு பொறுப்பு.

ரஜினிகாந்த் என் மீது காவி சாயம் பூச முயற்ச்சி செய்கிறார்கள் என்ற கருத்தை விசிக சார்பில் நான் வரவேற்கிறேன்.. அவரின் துணிச்சலை வரவேற்கிறேன்.

மோடி அரசின் பொருளாதார கொள்கை இந்திய மக்களின் அடிப்படையாக கொண்டதை விட பன்னாட்டு நிறுவனங்களை மையமாக கொண்டு வரையறுக்கப்படுகிறது.. அதனால் பொதுத்துறை நிறுவனங்கள், சிறு சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணத்திற்கு வாழ்த்துகள். ஆனால் அதன் மூலம் பயன் இருக்குமா என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிவிக்க முடியும்.

திமுக - விசிக கூட்டணிக்கு இடையே விரிசல் என்ற செய்தி வதந்தி.

உள்ளாட்சி தேர்தலில் அறிவித்த பின்பு எவ்வளவு இடங்கள் வாங்கப்படும் என்பது ஆலோசிக்கப்படும்.

வருகின்ற 11 ஆம் தேதி வள்ளுவர் சிலை அவமதிப்பு செய்தவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் நடக்கும் ஆர்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள், வங்கதேசத்தை சேர்ந்த 71 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை. நேற்று முதல் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.