ETV Bharat / state

தெற்கு அந்தமானில் புயல்? - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 4:53 PM IST

ஆழ்கடலில் உள்ள மீன்வர்களுக்கு எச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடலில் உறுவானது புயல் சின்னம்

chennai weather report: ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் 28 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 1 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29 ஆம் தேதி காலகட்டத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக, டிசம்பர் 1 ஆம் தேதி வரை மீன்வர்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. வரும் நவம்பர் 28ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படிங்க: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல்? - வானிலை மையம் எச்சரிக்கை!

நவம்பர் 29 ஆம் தேதி அன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.30 ஆம் தேதி: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 1 ஆம் தேதி: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு" தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போச்சுடா... மீண்டும்.. மீண்டுமா? - சென்னை வானிலை மையம் கொடுத்த ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.